பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

51



கதிரவன் தோன்றக் கண்டும்
கண்களை மூடிக் கொண்டீர்
மதியொளி பரவல் கண்டும்
மயக்கினை விட்டீ ரல்லீர்
புதியதோ ருலக மிங்குப்
பூப்பது காணீ ராகி
முதுகினை வளைத்துக் கொண்டீர்
முப்புரி நிமிர விட்டீர்.

 

(28-3-1984)