பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

61



இன்றுள அரசு நன்றிது செயாவிடின்
என்றுதான் விடியும் எந்தமிழ் வாழ்வு?
தம்மை யின்ற தாய்த்திரு நாட்டைச்
செம்மைத் தமிழால் செப்பிட மறுத்தவர்
பழிக்கவும் இழிக்கவும் பட்டனர் அன்றோ?
மொழிக்குயர் ஆக்கம் முனைந்து தராவிடின்
நாளைய உலகம் நம்மையும் பழிக்கும்;
வேளை மிதுதான் விரைந்திது புரிக!
செய்யத் தகுவ செய்யா விடினும்
எய்துவ தியாதெனத் தெரிந்து செயல்செயும்
நுண்மாண் நுழைபுலம் உடையீர்
நண்பால் வேண்டுதும் நலம்தமிழ் பெறவே.

 

30-11-1974