பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தாய்மொழி காப்போம்



ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டின் வரிக ளெல்லாம்
அணிவகுத்து நிற்கின்ற படையின் கூட்டம்;
சீர்ப்பாட்டைத் தொட்டதொட்ட இடத்தி லெல்லாம்
சீறியெழும் உணர்ச்சியைத்தான் காணல் கூடும்;
வேர்ப்பாட்டாம் அவன்பாட்டு விளைத்தி ருக்கும்
வீரமிகும் உணர்ச்சிக்குக் குறைவே யில்லை;
சாப்பாட்டுக் கலைந்துவரும் நம்மி டந்தான்
சற்றேனும் உணர்ச்சியிலை மான மில்லை.

மானமெனும் ஒருணர்ச்சி இருந்தி ருப்பின்
மதிகெட்டுத் தமிழ்மொழியைத் தமிழர் நாட்டில்
ஈனமுற எதிர்ப்போமா? நமக்கு முன்னே
எதிர்ப்பிருக்க விடுவோமா? இசைய ரங்கில்
வானமுதத் தமிழிருக்க அதைவிடுத்து
வந்தமொழிப் பாடல்களைப் பாடு வோமா?
ஏனுயர்வு தமிழ்க்கில்லை தமிழர் நாட்டில்?
இனியேனும் மானத்தைக் காப்போம் வாரீர்.

 

பாவேந்தர் விழா, உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர் 25-8-1979