பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தாய்மொழி காப்போம்



விழியொளி பெற்றும் வீழ்ந்ததில் மூழ்கின
பழிபெறும் எம்மினும் இழிந்தவர் இலையால்;
விழியுளார் படுகுழி வீழ்வதும் உண்டோ?
ஒருகால் உடையவன் ஊன்றுகோல் பெறலாம்
இருகால் உடையோன் எவனதை விழைவான்?
வளமிலாமொழிகள் வருமொழிச் சொற்களைக்
கொளலாம் அதனாற் குற்றமொன் றில்லை;
உயர்தனிச் செம்மொழி ஒப்பிலாத் தமிழ்மொழி
அயன்மொழிச் சொற்களை அணுகுதல் முறையோ?
முட்டிலாச் செல்வர் மற்றவர் பாற்கடன்
பெற்றிட முனைதல் பேதைமை யன்றோ?
அதனால்
சந்தனப் பொதியச் செந்தமிழ் மாமலை
தந்தருள் தென்றலில் தனிநடை பயில்வோம்;
தளர்நடை தவிர்த்துத் தனிநடை கொடுத்த
வளரிளங் கதிரை வாயுற வாழ்த்துவம்;
பலமொழி பயின்றும் பைந்தமிழ்ச் சோலையுள்
உலவிய தென்றலை உள்ளுறப் போற்றுவம்;
இசைத்தமிழ் கவைத்திட ஈகுவர் பெரும்பொருள்;
நாடகத் தமிழ்க்கும் நல்குவர் அவ்வணம்;
இயற்றமிழ் எனினோ ஈயார் ஒருபொருள்;
மயற்படும் மாந்தர்தம் மதிதான் என்னே!
இந்நிலை நிலவிய இம்மா நிலத்தில்
அந்நாள் வெண்பொன் முந்நூ றளித்திட
இயற்றமிழ் மதிப்பை ஏற்றிய புலவன்,
செயற்றிறம் புரிந்து செந்தமிழ் வளர்த்தவன்
கொள்கையிற் பிறழாக் குணக்குன் றவனைச்
கள்ளவிழ் மலர்கொடு கைகுவித் தேத்துவம்;
மறைமலை என்னும் மறையா மலையை
நிறைதர நெஞ்சினில் நிறுத்துவம் யாமே;
செறிபுகழ்ச் செந்தமிழ் செழித்திட அவன்றன்
நெறியறிந் தொழுகுவம் நிலைபெறும் பொருட்டே.

 

27.11.1976