பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தாய்மொழி காப்போம்



பாரெல்லாம் தமிழ்நெறியே செழிக்க வேண்டும்
பல்வகைய புதுநூல்கள் தோன்ற வேண்டும்
ஊரெல்லாம் புலவர்தமைப் போற்ற வேண்டும்
உயர்வதனால் தமிழ்மொழிக்குச் சேர்தல் வேண்டும்
சீரெல்லாம் மேவிவர வலிமை கொண்ட
செயற்குழுவாய்ப் புலவர்குழு வளர்தல் வேண்டும்
பேரெல்லாம் பெற்றபெரும் புலவீர் வாழ்க!
பேணுமுயர் நாடுமொழி வாழ்க! வாழ்க!

 

காரைக்குடிக்கு வருகை தந்த தமிழகப் புலவர் குழுவிற்கு வரவேற்பு - 18.10.1969