பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

வீடு போலீஸ் கண்காணிப்பின் கீழ் வந்துவிட்டது. போலீஸ் சோதனை இடுகிறது. “அந்திரே நிக்கொலாய்” என்பவன் கைது செய்யப்படுகிறான். இவனிடமிருந்தே தாய் பின்னால் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்டாள். சோசலிச புரட்சிக் கருத்துக்கள் விவசாயிகளிடமும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

காதலையும் நிராகரித்துப் புதிய சோசலிச சமுதாயத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட மகன் பற்றிப் பெருமை கொள்கிறாள் ‘தாய்’. புரட்சியில் சத்திய ஒழுக்கம் இருப்பது உணர்கிறாள். தானும் இணைகிறாள்.

பல போராட்டங்கள். தாய் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிப்பதில் பெரும் தொண்டாற்றுகிறாள்.

தொழிலாளர் தினமான “மே” தினம் ஆர்வத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். பாவெல் கூட்டத்தில் பேசினான். பேசியதற்காக அவனும் தோழர்களும் கைதாயினர்.

தோழர்கள் கைதான பின் துண்டுப்பிரசுரங்களை எடுத்துச்செல்ல ஆளில்லை. அவை நகரங்களுக்கும் செல்ல வேண்டும். இதைத் தாய் செய்து முடிக்கிறாள்.

மே தினப் பேச்சுக்காகப் பாவெல் மற்றும் அவன் தோழர்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் திவாந்திர சிட்சை வழங்கப்படுகிறது. பாவெல் நீதிமன்றப் பேச்சு அச்சடித்து வினியோகம் செய்யப்பட வேண்டும். பிரதிகளை எடுத்துக்கொண்டு வினியோகம் செய்யத் தாய் புறப்படுகிறாள்.

உளவாளி ஒருவன் பின்தொடர்ந்து சென்று அவள் முகத்தில் ஓங்கி அறைகிறான். நாலாப்பக்கமும் போலீஸ் தாக்குகிறது. ‘இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை முறியடிக்க முடியாது. உங்களுடைய கொடுமைகள் எல்லாம் உங்கள் தலையிலேயே வந்து விடியும்’ என்று முழங்குகிறாள் “தாய்”.

போலீஸ்காரன் குரல்வளையைப் பிடித்து

நெரிக்கிறான். தாய் திணறினாள்.....