45
முடிப்பதற்கும் அவன் அவளிடம், ‘இது என் திருமணப் பத்திரிகை என்று வெட்கத்துடன் விவரம் அறிவித்து: அவள் வசம் மடலைச் சேர்ப்பித்து முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
ஸ்கூலுக்கு இரண்டுமுறை வந்து பார்த்தாளுமே தில்லைக் கூத்தன்!...
நன்றியை உதிர்த்தபின், பஸ்வில் ஏறி அமர்ந்தாள்: டிக்கட் வாங்கினுள் மிஸ் தமிழரசி, --
பிராட்வேயைத் தொடும் நாற்சந்தியில் குறுக்கு மறித்து ஒடிய சைக்கிளில் தில்லைக் கூத்தனைக் கண்டாள். அன்றாெரு தினம் பள்ளி செல்லும் பாதையில் இதே யுவன் தன்னக் கண்டதும் சைக்கிளே நிறுத்தியதை உணர்ந்து, முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு மறுகித் திரும்பிவிட்ட சம்பவத்தை அவள் மறதியின் பிடியிலிருந்து துடைத்தெடுத் தாள். பாவம்'- என்று அவள் உதடுகள் உச்சரித்தன. பாடம் சொல்லிக் கொடுக்க வாத்தியாரம்மா கிடைத்து விட்டாள் மிஸ்டர் தில்லைக்கூத்தனுக்கு! இனி அவருக்குப் பயமில்லே! என்று தனக்குள் முடிவு செய்து அபூர்வமாகச் சிரித்துக்கொண்டாள்.
பஸ் புறப்பட்டது!
பாசக் குதுனகலம்
ஐகது
பாரதிக்குத் தெய்வங்கள் என்றால் வெகு இஷ்டம். அவர்களைப் பார்த்தால்-பார்த்து எண்ணிஞல், பாரதிக்கு ஏற்படக்கூடிய ஆனந்தத் திளைப்பு இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது.
பாரதி கவிஞர். .
அதனுல்தான், பராசக்தியை நேருக்கு நேர் நின்று கேட் கிருஜர், “சிரிக்கின்ற வரம் தா!” என்று.