இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xii
அவரது அருமை மகன் ராமு அவர்களுக்கும், நான் நன்றி கடன்பட்டுள்ளேன். இங்கே நான் குறிப்பிடுவதுபோல் நன்றி ஒரு கடன்தான். காரணம், எனது பழைய படைப்புகளை கொண்டு வருவதன் மூலம் இவர்களுக்கு புதிய வருவாய் வரப்போவதில்லை. ஆனாலும், என் மீதுகொண்ட அன்பாலும், என்னைப் போன்ற எழுத்தாளர்களின் மக்கள் வழி படைப்புகள் புதுப்பிக்கபட வேண்டும் என்ற சமூக நோக்காலும் பெரியவர் திருநாவுக்கரசு இந்த நாவலையும், இது போன்ற எனது இதரப் படைப்புகளையும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறார். அவருக்கு ஆயிரம் தடவை நன்றி கூறினாலும் அது முழுமையாகாது.
வாசகப் பெருமக்கள் இந்தப் படைப்பு குறித்து தங்களின் விசர்சனத்தை தெரியப்படுத்தினால் அது என்னை ஊக்குவிக்கும்.
- சு. சமுத்திரம்