பக்கம்:தாழம்பூ.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CD

தோளுக்கு மேலே பின்புறமாய் வளைந்திருந்த ஒரு கையில் தொங்கிக்கொண்டிருந்த கோணிப் பை, அவளது முதுகுக்கு உறைபோல ஒட்டிக்கொண்டு, அங்குமிங்கும் ஆடியத. கண்ணாடி மாதிரியான கோணி, அடியில் கனத்துக்கிடந்தது. மறு கையோ மூன்றடி நீளமும், முருங்கக்காய் பருமானமும் கொண்ட ஒரு இரும்புக் கம்பியை, அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் சர்தார்ஜி காப்புகள் மாதிரியான ‘கங்கண வளையல்கள். சட்டை என்று தள்ளவோ, ஜாக்கெட் என்று கொள்ளவோ முடியாத மேல் பாக உடுப்பு, முட்டிக் கைகள் வரை, முட்டி, இடுப்பு வரைக்கும் நீண்டு, இடையை பெல்ட்போல் கற்றிக்கொண்டிருந்தது. அழுக்கே ஒரு நிறமாகக் கொண்டது போன்ற களிமண் நிற ஆடை. இடுப்புக்குக் கீழே இருந்து குதிகால்வரை வியாபித்த சிமெண்ட் நிறப் பாவாடை. அதில் இடையிடையே சதுரஞ் சதுரமான சின்னச்சின்ன கண்ணாடிகள். வாழைக் குலையிலிருந்து மேல்போக்காய் விடுபட்ட வாழை இலை போன்று மார்பில் பட்டும் படாமலும் இருந்த தாவணி. காதுகளில் கம்மல்களும், அந்தக் கம்மல்களில் தொங்கிய வளையங்களுமாய்.

சரோசா, அந்தப் பங்களாவில் படிதாண்டிய பெண் போல் நாணிக்கோணி நின்ற தென்னை மரத்தில், கைக்கு எட்டாத . உயரத்தில் ஒரு தேங்காய் குலை மீது கண் வைத்து எம்பி எம்பிக் குதித்தாள். அவள் கைபட்டு, கைபட்டு, அது மேலே போனதே தவிர அந்தக் கைக்குள் அடங்கவில்லை. ஏதோ, தப்பு செய்துவிட்டது போல தலையில் அடித்துவிட்டு, பிறகு கையில் இருந்த இரும்புக் கம்பியை ஓங்கி, ஒரு ‘குலையில் ஒரு போடு போட்டாள். ஐந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/15&oldid=636593" இலிருந்து மீள்விக்கப்பட்டது