பக்கம்:தாழம்பூ.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தாழம்பூ

நிறுத்தி வைத்துவிட்டு ‘என்னம்மா, என்னம்மா’ என்று கேட்டுக்கொண்டே, அம்மாவை தூக்கப் போனான். அவளோ, மகன் கிடைத்த மகிழ்ச்சியில் வலியை கரைத்துக்கொண்டு ஆணையிட்டாள் :

“அதோ ஒடுறா பாரு. அவள் திருடி.கே.டி.என்ன அடிச்சுப் போட்டுட்டு ஒடுறா. அவனைப் போய் பிடிச்கட்டு வாடா, பிடிச்ச

கையோட இங்க இழுத்துட்டு வாடா.”

சரோசாவை, தன் முன்னால் இழுத்துக்கொண்டு வரப்படும் வரை எழுந்திருக்கப் போவதில்லை என்பது போல், அம்மாக்காரி அப்படியே கிடந்தாள். மல்லி, அந்தச் சமயத்திலும், மாத நாவலின் ஒரு உச்சகட்டப் பகுதியை படித்துக் கொண்டு நின்றாள். ஆனால் தாய்சொல் தட்டாத தனயனான இளங்கோ ஓடினான். அவள் ஒடிய பக்கமாக அவளைவிட வேகமாக ஓடினான். இதற்குள், சரோசா அந்தக் கிணற்றுச் சுவரில் ஏறி, வேலிச்சுவரில் தாவி, வெற்றிக்களிப்போடு நின்றபடி அவனைப் பார்த்தாள். அவன் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அட்டகாசமாகச் சொன்னாள் :

“அடச்சீ. போடா. எச்சிக்கலை.”

சரோசா, அந்த கவரிலிருந்து அடுத்த பக்கம் குதித்தாள். ஏற்கனவே அம்மா அடிபட்டதால் ஏற்பட்ட ஆத்திரம், இப்போது சரோசா கொடுத்தபட்டப் பெயரால் ஆவேசமாகி, இளங்கோவும், அடுத்த மூன்றாவது நிமிடம் அதே சுவரில் ஏறி அவளை மாதிரியே அடுத்த பக்கம் குதித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/24&oldid=636692" இலிருந்து மீள்விக்கப்பட்டது