பக்கம்:தாழம்பூ.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தாழம்பூ

கொடுக்கணும். நாற்பது வருஷமா டெல்லியிலே இருந்திட்டேன். செக்கரட்டேரியேட்டில் செக்ஷன் ஆபீஸரா போனமாசம்தான் சார் ரிட்டெயர்டு ஆனேன். மூணு வருஷத்திற்கு முன்னால வாங்கிப் போட்ட நிலத்தில் வீடு கட்டலாமுன்ன வந்தால் அய்யோ...”

அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை; அதற்குள் இன்ஸ்பெக்டரும் அதட்டினார்:

‘இது என்ன துஷ்டிவீடா ஒப்பாரி போடுறதுக்கு? சட்டுப்புட்டுன்னு விஷயத்தைச் சொல்லுங்க”

எதையோ பெரிதாய் எதிர்பார்த்து ஒப்பிக்கப் போன அந்த அம்மா, தனது மெல்லிய தேகத்தை லேசாய் ஒடுக்கிக் கொண்டு, இன்ஸ்பெக்டரை திடுக்கிட்டுப் பார்த்தாள். பிறகு எந்திரக் குரலில் விஷயத்தைச் சொன்னாள் :

“நாங்க வாங்கிப் போட்ட இரண்டு கிரவுண்டு இடத்தில் எவனோ ஒருத்தன் மல்ட்டிப் பிளாட் கட்டியிருக்கான் சார். உண்ணாம தின்னாமல் சேமிச்சப் பணத்தில வாங்கின நிலத்தை, எந்தப் பாவியோ வாயில போட்டுட்டான் சார்”

அந்த இன்ஸ்பெக்டரும் உண்மையிலே கொதித்துப்போனார். “அடக்கடவுளே! எந்த இடத்தில கட்டினாங்க?கட்டின பயல் கையில விலங்கு போட்டு இழுத்திட்டு வாறேன். எந்த இடத்தில?”

“சிக்னல் பக்கத்துல சார். பிள்ளையார் கோவில் இருக்கே அதுக்குக் கிழக்குப் பக்கம்.”

இன்ஸ்பெக்டர் முன்வைத்த மூளையை பின்வைத்தார். முன் யோசனையை பின் யோசனையாக்கினார். இதற்குள், எல் அண்டு ஒவும், அவரைப் பார்த்துக் கண்ணடித்தார். அது தேவையே இல்லை. இந்த கிரைம் இன்ஸ்பெக்டருக்கும் அதில் பிளாட் கட்டியது யார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/250&oldid=636704" இலிருந்து மீள்விக்கப்பட்டது