பக்கம்:தாழம்பூ.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 239

பட்டாக்கொடுத்திருக்கான். நாம என்ன செய்ய முடியும்? நாளைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினால், அதை விசாரிக்கப் போறதே இந்த தாசில்தார்தான். யார் நிலத்தையும் யாரும் அபகரிக்கலாம் என்பது மாதிரி ஆகிப்போச்சு”

“போகிற போக்கைப் பார்த்தால் நம்ம யூனிபாரத்தைத் திருடி எவனாவது அதை உடுத்திக்கிட்டு நம்ம நாற்காலியில் வந்தே உட்கார்ந்து, தான்தான் இன்ஸ்பெக்டர் என்று சொல்லிவிடலாம்; அப்பமும் நம்மால ஒன்றும் செய்ய முடியாது.”

இரண்டு இன்ஸ்பெக்டர்களும் ஒருவரையொருவர் இயலாமையில் பார்த்தார்கள். அதே சமயம் கிரைம் இன்ஸ்பெக்டர் சிந்தித்தார். திடீர் என்று மார்க் டிவைன் என்ற அமெரிக்க எழுத்தாளர் பெண்களுக்கு உபதேசித்தது நினைவுக்கு வந்தது. ‘கற்பழிப்பை எதிர்க்க முடியாவிட்டால், அதை ரசித்து அனுபவி.” இன்ஸ்பெக்டர், சாராய சக்ரவர்த்திக்கு டெலிபோன் செய்து, அவரது மல்ட்டிப் பிளாட் கட்டிடத்திற்கு வந்த ஆபத்தையும் அதைத் தாம் முறியடித்ததையும் சொல்லப் போனார். டெலிபோன் அருகே போனவர் திடுக்கிட்டார். எதைச் சொல்லப் போனாரோ அதை அந்த எல் அண்டு ஒ இன்ஸ்பெக்டரே சாராய சக்ரவர்த்தி ‘பி.ஏ.'விடம் ‘அய்யா அய்யா என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையே வெறுத்தப் போன கிரைம் இன்ஸ்பெக்டர், படிகளில் இறங்காமல் அந்த அறையிலிருந்து கீழ்த்தரைக்குக் குதிக்கப் போனபோது, மேஜையில் இருந்த ரேடியோ மைக் அலறியது. எடுத்தார்.

“எஸ் சார், கிரைம்தான் சார் பேசுகிறேன். எஸ் சார். நோ சார். எஸ். எஸ் சார். விசாரிக்கேன் சார். அவளும் பெரிய ரவுடிதான் சார். எஸ் சார். சாரி சார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/253&oldid=636707" இலிருந்து மீள்விக்கப்பட்டது