பக்கம்:தாழம்பூ.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 251

வனஜா,அப்துல்லாசொன்னதைச்செயல்படுத்தும் வகையில் பதறிப் பதறிப் பேசினாள் :

‘செக்யூரிட்டி கார்டு கிட்ட இவளை ஒப்படையுங்க. செக்யூரிட்டி ஆபீஸ்ரையும் வரச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில என்ன செய்யப் போறாளோ?”

தலைமைக் கிளார்க்கை முறைத்துக் கொண்டு நின்ற சரோசா, வனஜா பக்கம் முகம் திரும்பினாள். அவளைக் கடித்துக் குதறப்போகிறவள்போல் பற்களைக் குவித்தபடியே சவாலிட்டாள்:

“நீயே செக்யூரிட்டி கார்டை வரச்சொல்லுமே. ஆளுக்கு ஆள் பேப்பர் வெயிட்டுங்களையும், எழுதாத ரிஜிஸ்டரையும், பால் பாயிண்ட் பேனாக்களையும், பிளாஸ்க்குங்களையும் கொண்டு போறதை செக் பண்ணாத கார்டு என்னை என்ன செய்துடுவான்னு பார்த்துடறேன்.”

வனஜா அதிரிந்து போய் வாய்க்கு உதடுகளால் தாழிட்டு, அக்கெளண்டன்ட் ராமசாமியின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள். அப்போது சிறிது சுதாரித்துக்கொண்ட தலைமை கிளார்க் அசட்டையாகப் பேகவது போல் சட்டையெல்லாம் வேர்வையால் நனைய தட்டுத் தடுமாறிப் பேசினார்:

“இந்தா பாரும்மா, எதுபேசணுமுன்னாலும் உள்ளே இருக்கிற ஆபீஸர்கிட்ட பேசு, உனக்கும் எங்களுக்கும் பேச்சு இல்லை.”

‘ஆபீஸரு மட்டுமாய்யா வேலை கொடுத்தார்? நீ கொடுக்கலை? தப்புத்தண்டா செய்யாத போதே என்னைத் திட்டலை? நான் வாங்கிக் கொடுத்த டியையெல்லாம் குடிச்சியே, அது டீயா, இல்லாட்டி வேற எதுவுமா?

தலைமை கிளார்க் வாயை அசூசையாக சப்புக் கொட்டியபோது, சரோசா மேலும் தொடர்ந்தாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/265&oldid=636720" இலிருந்து மீள்விக்கப்பட்டது