260 தாழம்பூ
“உங்களுக்கும் இந்தப் பொண்ணுக்கும் என்ன சார் சம்பந்தம்? நீங்களும் அநேகமா ஸ்டேஷனுக்கு வரவேண்டியது இருக்கும்.”
இதற்குள் நடப்பதை கேள்விப்பட்டு, பழைய செக்ஷன் ஆட்களும் கூடிவிட்டார்கள்.
அஸிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம், இளங்கோவைப் பார்த்துக் கொலை பழிக்கு சாட்சியாய் போகவேண்டியது வருமோ... என்கிற பயத்தில் உண்மையை கொட்டுவதாக நினைத்து உளறிக் கொட்டினார்.
“என்னப்பா இளங்கோ! உன்னோட உல்லாச சல்லாபத்தை யெல்லாம் வெளிவ வச்சுக்காம எங்களையே புரோக்கர் மாதிரி ஆக்கிட்டியே. கவர்மெண்ட் சர்வண்ட் காண்டக்ட் ரூல்படி உன்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போறோம். நல்லவேளை, போலீஸ்காரர்சரியான சமயத்துக்குவந்துட்டார். இல்லாட்டி, இவள் எங்களையும் ஒரு வழி பண்ணியிருப்பாள். ஆப்டர் ஆல் ஒரே ஒரு மாதச் சம்பளம் கிடைக்கலேன்னு எப்படிக் குதிச்சா?”
“இளங்கோ! உன்னை விடப்போறதில்ல மேன்.”
பித்துப் பிடித் து நின்ற இளங்கோவின் தோளில், மோகன் கை போட்டாள். “டோண்ட் ஒர்ரி இளங்கோ. என்கொயரி இல்லாம உங்களை எதுவும் செய்ய முடியாது. அதுல நான் உங்களுக்குடியன்ஸ் அஸிஸ்டெண்டா இருந்து, இவங்களை நார் நாராகக் கிழிக்கப் போறேன் பாருங்க”
சரோசா அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். இளங்கோவை உற்றுப்பார்த்தாள்.'துரைண்ணே என்று மீண்டும் கத்தப்போனாள். பிறகு எதுவோ நெஞ்சில் கத்த, அதன் உந்தலில் அவள் வாயாடியது.
“அடப்பாவிங்களா ஒண்னுமே அறியாத இந்த கொழந்தப் பையன் மேல பழி போடறlங்களே; இந்த அல்பத்துக்காக படாத