பக்கம்:தாழம்பூ.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 277

அல்ல இவர். மந்திரிகளையும், பெரிய மனிதர்களையும் கைக்குள் போட்டு, ஏற்கனவே குழந்தை பெற்று, கணவன்களோடு வாழும் பெண்களுக்குமேடையில் அதே கணவன்களோடுபோலிக்கல்யாணம் செய்துவைக்கும் அமைப்பும் அல்ல, இவரது அமைப்பு:ஒசைப்படாமல் ஆங்காங்கே உதவி செய்கிறவர்கள். இவர்கள் எப்போதாவது ஓசை எழுப்பினால், அதை துப்பாக்கி ஓசையாலும் தடுக்க முடியாது என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியும். ஆகையால், “ஒன் மினிட் மேடம்” என்று சொல்லிவிட்டு யாருக்கோ அவசர அவசரமாய் டெலிபோன் செய்வதுபோல், டயலில் ஒன்பது எண்களைச் கழற்றினார். பிறகு லைன் கிடைக்காதவர்போல் முகத்தைச் களித்துக்கொண்டே அந்தம்மாவைப் பார்த்தபோது, அவள், நேரிடையாகவே கேட்டாள் :

“இந்தப் பெண்ணோட பேக்ரவுண்ட் எனக்கு நல்லாவே தெரியும் சார். பாவப்பட்டவள். இவளோட அண்ணாத்தே, அதான் ஒங்களுக்கும் தெரிஞ்ச பெரிய மனுஷன் இருக்காரே.”

இதற்குள் எஞ்சிய நான்கு பெண்களில் வாய் தூக்கலான ஒருத்தி இடைமறித்தாள் :

“எதுக்காக, ஒரு தாதாவுக்கு ‘ரே போடுறீங்க?” “நீ கம்மா இரும்மா. அந்தப் பெரிய மனுஷன் இந்தப் பெண்ணை, ராத்திரியோடராத்திரியாவேட்டையாடி இருக்கான். எப்படியோ தப்பித்து இந்தப் பொண்ணு, கமிஷனருக்குப் புகார் செய்திருக்காள். ஒங்களுக்கு நேரடியாய் எழுதாதது தப்புத்தான். அதுக்காக இவ்வளவு பெரிய குற்றத்த அவள்மேல் கமத்தப்படாது. ஒங்களுக்கும் பிள்ளகுட்டி இருக்கு”

இன்ஸ்பெக்டருக்கு, இப்போதும் ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல் இருந்தது. அதை, அந்தம்மா ஆட்சேபிக்கப் போவதில்லை; ஆனாலும் ஒரு தயக்கம். இந்தச் சமயம் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/291&oldid=636760" இலிருந்து மீள்விக்கப்பட்டது