பக்கம்:தாழம்பூ.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தாழம்பூ

அடிகொடுத்த சரோசாவை, அடிபட்ட சரோசாவாகப் பார்த்த வேளையிலே இருந்து, இளங்கோ மனமும் அடிபட்டு வீங்கியது.குழந்தையை, அவள் கடத்தியிருப்பாள் என்று அவனும் நம்பவில்லை. மனம் வலிப்பு வந்தது போல் இழுத்தது. நெஞ்சுக்குள்ளே ஒன்றும், கண்ணுக்குள்ளே ஒன்றும், எதிர் எதிராய் இழுத்துக் கொண்டன. திருமலையப்பன் கொடுத்த உந்தலில், அவன் இன்ஸ்பெக்டர் இருந்த மாடிக்கப்படி ஏறினான். அந்த இன்ஸ்பெக்டர் முன்னால் போய் நின்றான்.

இன்ஸ்பெக்டர், ஒருமைக்கில் எள்ளும் கொள்ளுமாய்பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் அந்த மைக் அலறியபோது, அதற்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார். பிறகு, “நான் இன்ஸ்பெக்டர் இல்லேய்யா, இந்த ஏசியும், டிசியும் இருக்கிற வரைக்கும், நான் குளோரிபைடு கான்ஸ்டபிள்தான்” என்று கிரைம் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சொன்னார். அந்த கிரைமோ, அப்படியானால் அந்த இன்ஸ்பெக்டர், தனக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் போல் தலையை ஆட்டினார்.

இளங்கோலேசாய் இருமினான்; இன்ஸ்பெக்டர்கேட்டார். “என்னப்பா வேணும்?”

“நான் டெபுடி கமிஷனருக்கு வேண்டிய அங்கிளோட அப்போ வந்தேனே. சரோசாவை விட்டுடுங்க சார்”

‘ஏய்யா, டெபுடி கமிஷனருக்குத்தான் நான் சல்யூட் அடிக்கணும். உனக்கும் அடிக்கணுமா? என்னய்யா நீ.பரமசிவம் கழுத்துப் பாம்பு மாதிரி ஆடுறியா? அவளுக்கும் உனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. டெபுடி கமிஷனர் கிட்டே நானே பேகறேன். சரி இப்போ மரியாதையா வீடுபோயிச்சேரு. சரோசாவை எப்படி டில் பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும்.”

இளங்கோ, இன்ஸ்பெக்டரை மருவி மருவிப் பார்த்துவிட்டு, நடந்து வெளியே வந்தான். வலது பக்கம் ஒரு முனகல் சத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/82&oldid=636835" இலிருந்து மீள்விக்கப்பட்டது