—9—
ஆரியர்தமை ஒப்பா ஆதித்திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி - சகியே சேரியில்
37
சேரிப் பறையர்என்றும் தீண்டாதார் என்றும் சொல்லும்
வீரர்தம் உற்றாரடி - சகியே வீரர்நம் உற்குரடி
38
வெஞ்சமர் வீரர்தம்மை வெல்லாமற் புறந்தள்ளப்
பஞ்சமர் என்டூரடி - சகியே பஞ்சமர் என்றாரடி
39
தஞ்சம் புகாத்தமிழர் சண்டாளர் எனில் தாழ்ந்து
கெஞ்சுவோர் பேரென்னடி? -- சகியே கெஞ்சுவோ
40
மாதர்சகிதம் தங்கள் மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
போதனை செய்தாரடி -- சகியே போதனை செய்தாரடி
41
சூதற்ற மன்னர்சில்லோர் சுவர்க்கக் கதையை
நம்பித்தீதுக் கிசைந்தாரடி - சகியே தீதுக் கிசைந்தாரடி
42
உலகம் நமைப்பழிக்க உட்புகுந் தாரியர்கள்
கலகங்கள் செய்தாரடி - சகியே கலகங்கள்
43
கொலைக்கள மாக்கிவிட்டார் குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
நிலைக்களம் என்றரடி - சகியே நிலைக்களம் என்ருரடி
44
சாதிப் பிரிவுசெய்தார் தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி - சகியே நீதிகள் சொன்
45
ஓதும் உயர்வு தாழ்வை ஆரியர் உரைத்திட்டால்
ஏதுக்கு நாம் ஏற்பதோ? -- சகியே எதுக்கு நாம்
46