பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—19—

சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
சூழ்வது பூசனையோ - ஒரு
சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச்
சதியா லோ சனையோ? 9

ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்
என்று மதித்ததுவோ? - சாமி
நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
நீரிற் குதித்ததுவோ? 10

மாலய மாக வணங்கிடச் சாமி
வந்திடு வார் என்றிரே -- அந்த
ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
வழிமறித்தே நின்றிரே. 11

ஆலயம் செல்ல அருகரென்றே சிலர்
அங்கம் சிறந்தாரோ? -- சிலர்
நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
நலிந்து பிறந்தாரோ? 12

தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
சாமி மலைப்பதுண்டோ? - இங்கு
வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
வருத்தித் தொலைப்பதுண்டோ? 13