இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஞாயமற்ற மறியல்
(நொண்டிச்சிந்து)
என்றுதான் சுகப்படுவதோ! - நம்மில்
யாவரும் "சமானம்" என்ற பாவனை இல்லை - அந்தோ
ஒன்றுதான் இம் மானிடச்சாதி - இநில்
உயர்பிறப் பிழிபிறப் பென்பதும் உண்டோ - நம்மில்
அன்றிருந்த பல தொழிலின் - பெயர்
அத்தனையும் "சாதிகள்" என் றாக்கிவிட்டனர் - இன்று
கொன்றிடுதே "பேதம்" எனும் பேய்! - மிகக்
கூகூம்இக் கதை நினைக்கத் தேசமக்களே!
(என்று)