—31—
சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி?
தோழி - அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது
தோழா - அந்தப்
புள்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்?
தோழி அதைப்
போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர்
தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்ததுதான் எவர்?
தோழி - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி
தோழா - முன்பு
வல்லவர் சேசு வகுத்ததுதான் என்ன?
தோழி - புவி
'மக்கள் எல்லாம் சமம்' என்று முழங்கினர்
தோழா.
ஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர்
தோழி - அவர்
ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர்
தோழா - அடி
வேண்டவரும் திருக் கோயில் வழக்கென்ன?
தோழி - அட
மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர்
தோழா - விரல்
தீண்டப்படாதவர் என்பவர் யாரடி?
தோழி - இங்குச்
சேசு மதத்தினைத் தாபித்த பேர்கள்என்
தோழா - உளம்
தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி?
தோழி - அவர்
'சோதரர் யாவரும்' என்று முழங்கினர்
தோழா.
***
பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன?
தோழி - இவை
பாரதநாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர்
தோழா - இங்குக்
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ?
தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும்
தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின்தொண்டர் நினைப்பென்ன
தோழி - தினம்
நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது
தோழா-இந்த