பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


“அம்மா அழாதீர்கள்! என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரையில், நான் நம்முடைய நாட்டை மீட்கப் போராடுவேன். உங்களை மீண்டும் அரியாசனத்தில் வைத்துப் பார்ப்பதே இனி என் இலட்சியம்” என்று சூளுரைத்தான் வெற்றி வேலன்.

“மகனே, நான் இன்று தான் உன்னைப் பெற்றதன் பலனை அடைந்தேன். உன் இலட்சியம் வெற்றியடையுமாக!” என்று வாழ்த்தித் தாங்கள் வாழ்விழந்த கதையைக் கூறினார் அரசர்.

"மகனே,எப்போதும் உண்மையே பேசு; என்றும் உண்மைக்கே பாடுபடு; எவரிடத்திலும் அன்பாயிரு; உன்னை யண்டி வந்தவர்களுக்கு உதவி புரி” என்று அறிவுரைகள் கூறி விடைகொடுத்து வழியனுப்பினாள் அரசி.

இளவரசன் புறப்பட்டான். அரசனும் அரசியும் தங்கள் பிரிவுத் துயரத்தை யடக்கிக் கொண்டார்கள்.