பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


“வெற்றிவேலா, அன்று நாடாளும் ஆசையில் அண்ணனைக் காட்டுக்கு விரட்டி விட்டேன். ஆனால் அதன் பிறகுதான் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்காட்டியது. எப்படியாவது அண்ணனைத் தேடிப்பிடித்து மீண்டும் அரசர் ஆக்கி அவர் கீழே இருந்து பணி செய்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் என் ஆட்கள் அவரைத் தேடிப்போன போதெல்லாம் அவர்கள் தன்னைப் பிடித்துக் கொல்லத்தான் வருகிறார்கள் என்று பயந்து ஓடிவிட்டார். என்னால் அவரைக் கண்டு பிடிக்க முடியாமலே போய்விட்டது. நல்ல வேளையாக நீ இப்போது வந்து சேர்ந்தாய். உன் அப்பா எங்கே இருக்கிறார்? சொல். அவரை அழைத்து வந்து அடுத்த மாதமே உனக்குப் பட்டம் கட்டிவிட்டு நான் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினான்.

வெற்றிவேலன் தன் சிற்றப்பனின் பேச்சை உண்மை என்று நம்பிவிட்டான். தன் தாய்தந்தையர், இருக்குமிடத்தை அந்த வஞ்சகனிடம் கூறிவிட்டான். அந்த வஞ்சகனுடைய சொற்களை நம்பி அவனிடம் அன்பு பாராட்டவும் தொடங்கினான்.