இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த கோவேந்தன்
變 89
கொடுத்தாலும், ஆணையும் பெண்ணையும் பிணைத்து வைக்கிறது ஒருவருக்கொருவர் வளைந்து கொடுக்க வைத்தாலும், அவர்கள் இருவரையும் திடமாக இணைத்து வைக்கிறது
வன்மை, மென்மை இவற்றின் நடுவே, ஆணும் பெண்ணும் விட்டுக் கொடுத்து உறுதியாக இருக்க, அங்கே வளைந்தும், வளையாததுமான அமைதி நிலவுகிறது
109. மென்மையின் தொடக்கம்
பெண்ணுக்குள் ஆண் மென்மையையும், கருவாயையும், தொடக்கத்தில் கதகதப்பான பெரிய கடலையும் காண்கின்றான் மேலும், பிறப்பு, கடினம் இவற்றால் வெற்றி கொள்ளப்பட்ட தனது பிறப்பிடத்தையும காண்கிறான்
பெண் என்ற கடலில இழந்த ஆண் தொடக்கத்தின் மென்மைக்குத் திரும்புகிறான் பின் தான் போரிட வேண்டிய வன்மைக்கு வருகிறான்
இப்படித்தான் பெண்ணின் மென்மை ஆணின் வன்மையை வெல்கிறது இப்படி ஆண் ஏன் மென்மையை வெல்வதைக் காண்கிறான்