பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரிச்சந்திரன் நெ : 2

எங்களூர்ப் பகுதியிலே 'கோமாவரம் கருப்பையா' என்றால், அழுதபிள்ளை வாய் மூடும்; அழாத பிள்ளை அழத்தொடங்கும்! அவ்வளவு பயம் அவனென்றால்! சின்னப் பிள்ளைக்குக்கூட அவனைத் தெரியம்; அதாவது, அவன் பெயர் தெரியும். இப்படிப்பட்ட மகத்துவம் பூண்ட அவன் யாரென்று தெரிந்தால் உங்களுக்கும்கூட அஸ்தியில் ஜுரம் வந்து விடுமே!

அவன் ஒரு திருடன். கன்னக்கோல் வைப்பதில் கை தேர்ந்தவன்; அதாவது, அவனுடைய கை தேர்ந்திருந்தது. யாரிடம் சிட்சை பெற்றானோ, தெரியவில்லை.

தெரிந்தால், அந்த வாத்தியாரிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ளப் பிரியப்படுகிறேனோ வென்று சந்தேகப் படுகிறீர்களோ?

தயவுசெய்து அப்படியெல்லாம் நினைத்து விடக் கூடாது.