பக்கம்:திரட்டுப் பால்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன்; கட்டிப் புறப்பட டா;சத்தி வாள்என்றன் கையதுவே. வெட்டும் கடாமிசைத் தோன்றும்வெங் கூற்றன் விடும்கயிற்ருல் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும்; கராசலங்கள் எட்டும் குலகிரி எட்டும்விட் டோடஎட் டாதவெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே. நீர்க்குமி ழிக்கு நிகர்என்பர் யாக்கை;நில் லாதுசெல்வம்; பார்க்கும் இடத்தந்த மின்போலும் என்பர்; பசித்துவந்தே ஏற்கும் அவர்க்கிட என்னின்னங் . கேனும் எழுந்திருப்பார்; வேற்கும ரற்கன் பிலாதவர் ஞானம் மிகவும்.நன்றே! பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற்றி லேன்;மத கும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சைல சரசவல்லி 51 (64) (65) (66)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/59&oldid=894420" இலிருந்து மீள்விக்கப்பட்டது