இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கந்தர் அலங்காரம் கெடுதல் இலாத் தொண்ட ரிற்கூட் டியவா! கிரவுஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன்; பிறவி அறஉச்சிறை விடுதலைப் பட்டது; விட்டது பாச வினேவிலங்கே, iut)) சலம்காணும் வேந்தர் தமக்கும்அஞ் சார்;யமன் சண்டைக்கஞ்சார்; துலங்கா நரகக் குழி அணு கார்;துட்ட நோய்அணுகார்; கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானேக்கும்;கந்தன் நன்னூல் அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே. (101) திருவடி யும்தண்டை யும்.சிலம் பும்சிலம் பூடுருவப் பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும் குருவடி வாய்வந்தென் உள்ளம் குளிரக் குதிகொண்டவே. (102) இராப்பகல் அற்ற இடம்காட்டி யான் இருந் தேதுதிக்கக் குராப்புனே தண்டையந் தாளரு ளாய்;கரி கூப்பிட்டநாள்