துளுத் திரியக் காரணங்கள்
1.தட்ப வெப்பநிலை.
2.இலக்கண நூலின்மை.
3.தமிழரொடு தொடர்பின்மை.
4.துளுவர் தமிழ்நூலைக் கல்லாமை.
5.வடசொற் கலப்பு.
6.ஒலிமுறைச் சோம்பல்.
துளுத் திரிந்த வகைகள்
(1) ஒலித்திரிபு எ-டு: ழ-ள, கூழ்-கூளு, ச-ஐ, பாசி-பாஜி (2) போலி எ-டு: ஐ-எ, காடை-காடெ; ழ-ர, கோழி-கோரி; வ-ப, வேலை-பேலெ. (3) சொற்றிரிபு எ-டு: பன்றி - பஞ்சி, ஆறு - ஆஜி. (4) ஈறுகேடு எ-டு: (குசவன்) குசவெ - இருபது - இர்வ. (5) இலக்கணப் போலி எ-டு: யாவது - தாதவு. (6) ஈறுமிகை எ-டு: குருக்கள் - குருக்குளு, வாவல் - பாவலி. (7) தொகுத்தல் திரிபு எ-டு: திருத்து - தித்து, கரும்பு - கர்ம்பு. (8) கொச்சை எ-டு: சுற்றும்-சுத்த, பற்று-பத்து, புது-பொசெ. (9) புணர்ச்சியின்மை எ-டு: நீரு குட்ட. (10) வழக்கற்ற சொல் வழங்கல் எ-டு: உணங்கு - ஒணகு, மல்ல = பெரிய. (11) புதுச்சொல் லாக்கம் எ-டு: ஹொட்டகச்சி = பொறாமை. 12) சொல்வடிவ வேறுபாடு எ-டு: இங்கு - இஞ்சி. (13) வடசொல் வழக்கு: எ-டு: பாஷெ, பாபி (பாவி), சங்கட, மார்க,