(8)புத்தாக்கச் சொல்
எ-டு: மேடி(ம.) = வாங்கு, வெள்ளு (தெ.) = செல்.
(9)தாயொடு (தமிழொடு) தொடர்பின்மை.
(10) வடசொற் கலப்பு.
(11) வடமொழி எழுத்தையும் இலக்கணத்தையும் மேற்கொள்ளல்.
(12) தமிழின் பண்படுத்தம் (Cultivation).
8. திரவிடத்திற்கு ஆரியக் கலப்பால் வந்த கேடு.
(1) தாய்மொழிக்கும் சேய்மொழிக்கும் தொடர்பு அறவு.
(2) திரவிடமொழிப் பிரிவினையும் மக்கட் பிரிவினையும்.
(3) திரவிட வொலித் திரிபும் சொற்றிரிபும்.
(4) திரவிடச்சொல் வழக்கொழிவும் மறைவும்.
(5) சரித்திர மறைப்பும் மலைவும்.
(6) புதுச்சொல்லாக்கத் தடை.
(7) திரவிடர்க்குத் தாய்மொழி யுணர்ச்சியின்மை.
(8) திரவிடக் கலை வளர்ச்சியின்மை.
(9) திரவிட மொழி மறைவு.
(10) சொல்வழி ஐயப்பாடு. (அதாவது சில சொற்கள் ஆரியமா திரவிடமா என்று ஐயுறப்படுதல்.)
ஆரியர் வடமொழியைத் தேவமொழியென்று சொல்லித் திரவிட மொழிகளிலெல்லாம் எண்ணிறந்து வேண்டாத வடசொற்களைப் புகுத்தி, தமிழொழிந்தவற்றிற்கு வடமொழி யெழுத்துகளையும் இலக்கணத்தையும் வகுத்துச் சரித்திரத்தை மாற்றி, திரவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாகக் காட்டி, வடமொழியையே திரவிடத் தாயென்று கருதும்படி செய்து விட்டனர். தமிழரல் - திரவிடரும் வடமொழித் தொடர்பை உயர்வாகவும் தமிழத் தொடர்பை இழிவாகவும் கருதி, ஆரியச் சார்பில்லாத தமிழையும் தமிழரையும் பழிக்கின்றனர். இது, மூக்கறையன் பிறரையும் மூக்கறுக்கச் சொன்ன கதையேயன்றி வேறன்று.