வில் துணைவரான நூற்றுவர் கன்னர் ஆந்திர மன்னரா யிருந்திருக்கலாம்.
ஆந்திரர் நெடுங்காலமாக ஒரு தனி மன்பதையராக இருந்து வந்திருக்ன்றனர்; எனினும், அவரது மொழி கடைக் கழகக் காலம் வரயில் கொடுந்தமிழாயும் கிளைமொழியாயு மிருந்து அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் இனமொழி யாய்ப் பிரிந்துவிட்டது. கடைக்கழகக் காலத்தில் வேங்கட வெல்லையில் தெலுங்கு இருந்ததில்லை. அன்று வேங்கட மலை புல்லி என்னும் தமிழ் வள்ளலுக் குரியதாயிருந்தது.
"புல்லிய - வேங்கட விறல்வரைப் பட்ட" (புறம்.385)
"கடுமான் புல்லிய காடிறந் தோரே" (அகம்.)
தொண்டை மண்டலத்து வேங்கடக் கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான பொத்தப்பி நாடு கண்ணப்ப நாய னார் திருநாடாகும்.
"கண்ணப்பர் திருநா டென்பர்..... பொத்தப்பி நாடு"
(பெரிய. கண். 1.)
வேங்கடமலை தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்தது.
"பல்குன்றக் கோட்டமென்பது தொண்டை நாட்டின் பெரும்பிரிவாகிய 24 கோட்டங்களுள் ஒன்று..... பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம்" என்னும் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் என்னும் சிலாசாசன (கல்வெட்டு) வாக்கியத்தால் திருவேங்கடமலை (திருப்பதி)யும் பல்குன்றக் கோட்டத்துள்ளதென்று தெரிகிறது. "குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே" (மலைபடு. 583) என்பது இதனை வலியுறுத்தும்.
(பத். சாமிநா. ப. 57
தெலுங்கு மொழியை முதன் முதலாகக் குறிப்பிட்ட அயலார் 7ஆம் நூற்றாண்டினரான ஹு வென் த்சாங் (Hwen Thsang) என்னும் சீனத் திருப்போக்கர் (யாத்திரிகர்).