8. அன்புடைமை 343 மான மேன்மையை உரிமையோடு பேணிவர வேண்டும் என்பது குறிப்பு. பிறவியின் பெருமையை உணர்ந்து உரிமையைச்செய்க. ஆர்உயிர்க்கு இப்பிறப்பில் மக்களுடம்போடு உண்டான தொடர்பு முற்பிறப்பில் அஃது அன்போடு பொருக்தி வந்த வளமையே எனவும் இது கிழமையா ப் பொருள் பயந்துள்ளது. எவ்வுயிர்க்கும் இங்கு யார்க்கும் அன்பு செய் அரிய பிறவிக்கு உரிய பயன் யாரிடமும் ஆர்வமாப் ஆதரவு புரிவதே. அவ்வாறு புரியின் அது திவ்விய மகிமை பாய்ச் சிறந்து வரும். இவ்வுண்மை திருமூலரிடம் தெளிவாய்த் தெரிய கின்றது. சரி தம். இவர் சிறந்த சிவயோகி. சக்தி தேவரது அருள் பெற்றவர்; சுந்தரநாதன் என்னும் பெயரினர். ஞான யோகங்களில் பழகி யிருந்த இவர் அகத்தியமுனிவரைக் காண விரும்பித் தென்திசை நோக்கி வந்தார். காவிரி நதியைக் கடக்கார், தென்கரையை அடைக்கார். அதன் அருகே யிருக்க காட்டில் மூலன் என்னும் பேருடைய ஓர் இடையன் பசுக்கனை மேய்த்து வந்தான்; விதி வசத்தால் அன்று இறக்கான்; பசுக்கள் யாவும் பரிந்து வருக் தின; அவை பரிவாப் மறுகி நிற்கும் கிலையைக் கண்டு இவர் உள்ளம் உருகினர். அவற்றின் தன் பக்கை நீக்க விரைந்தார்; யோக மகிமையால் தமத காயத்தை ஒரு புதரில் மறைத்தார்; அக்க ஆயன் உடலில் இத்தாயர் புகுந்தார்; புகவே அவன் எழுந்தான்; பரிந்து கின்ற பசுக்கள் எல்லாம் மகிழ்ந்து சூழ்ந்தன; ஆவினங்களின் உவகையை நோக்கி உளம் மிக மகிழ்ந்த இவர் அவை இன்புறம்படி அன்பு புரிந்து ஆகளித்துக் காத்தார். ஆவின்நிரை மகிழ்வுறக்கண்டு அளிகூர்ந்த அருளினராய் மேவியவை மேய்விடத்துப் பின்சென்று மேய்ந்தவைதாம் காவிரிமுன் துறைத்தண்ணிர் கலந்துண்டு கரைஏறப் பூவிரிதண் புறவின்நிழல் இனிதாகப் புறங்காத்தார். (பெரிய புராணம்) இவ்வாறு ஆர்வமாய் இவர் ஆகரித்த கின்ருர்; அக்தி வரவும் அவை ஊரை நோக்கிச் சென்றன. இவரும் அன்போடு பின்பு சென்ருர் மூலன் மனைவி இவரைத் தனது கணவன் என்றே
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/342
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை