இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-8-
சிறப்புப் பாயிரம்.
வள்ளுவர்வாய் வந்ததிருத் தெள்ளமுதாம்
திருக்குறளை மருவி இன்பம்
அள்ளுமுயர் குமரேச வெண்பாஒன்று
உலகுவந்து துதிக்கச் செய்தான்
கொள்ளுமியற் புலமையொடு கோதறுநற்
குணங்கள்குடி கொண்ட தூயோன்
தெள்ளுபுகழ்ச் செகவீர பாண்டியனாம்
கவிராச சிங்கம் மன்னோ.