பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 திருக்குறட் குமரேச வெண்பா 5. வாய்வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் வலம்படு தானே மன்னவன் தன் சீனச் சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும் பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு உற்றதும் எல்லாம் ஒழிவின் அறுணர்ந்தாங்கு 10. என்பதிப் பெயர்ந்தேன என்துயர் போற்றிச் செம்பியன் மீதுார்ச் சிறந்தோர்க்கு உரைக்க மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டுக் கோவலன் தாதை கொடுந்துயர் எய்தித் 15. துறந்தோர் தம்முன் துறவி எய்தவும் துறந்தோன் மனேவி மகன் துயர் பொருஅள் இறந்ததுயர் எய்தி இரங்கிமெய் விடவும் கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணலம் பெருந்தவத்து ஆசீவகர்முன் 20. புண்ணிய தானம் புரிந்தறம் கொள்ளவும் தானம் புரிந்தோன் தன்மகனேக் கிழத்தி நாள்வீடு கல்லுயிர் நீத்துமெய் விடவும் என்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின் நன்னீர்க் கங்கை ஆடப் போந்தேன் 25. மன்னவர் கோவே வாழ்க ஈங்கென." (சிலப்பதிகாரம், 27) தன்னுடைய சொல்லால் நேர்ந்த அல்லல் கிலைகளை இன்னவாறு மாடலன் மறகி உரைத் தள்ளான். உள்ளம் கல்லவனுயிருந்தும் தன் வாயை அடக்காமையால் பலதுயர்கள் விளைந்த விட்டன; அந்தப் பழி பாவங்களை அஞ்சிக் காசிக்குப் போப்க் கங்கை யில் முழுகிச் சிறிது ஆறுதல் அடைந்திருக்கிருன். தீச்சொல்லின் பொருள் ஒன்று இருக்தாலும் அது பல நன்மைகனையும் கெடுத்து விடும் என்பதை உலகம் காண இவன உணர்த்தி கின்ருன். சொல்லடக்கம் இல்லாமல் சொல்லற்க; சொல்லினே அல்லலே யாகும் لييت إك அல்லல் அடையாமல் அடங்கிப் பேசுக. காது