பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெஃகாமை 795 174. வள்ளுவனர் தள்ளா வறுமையுற்றும் வெஃகியொன்றும் கொள்ளவில்லை என்னே குமரேசா-மெள்ள இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் (+) இ-ன். குமரேசா வள்ளுவப்பெருமான் வறுமையுற்றிருந்தம் ஏன் ஒரு பொருண்யும் விரும்பாமல் கின்ருர்? எனின், புலம் வென்ற புன் மையில் காட்சியவர் இலம் என்று வெஃகுகல் செப்பார் என்க புலன்களை அடக்கி அமைந்த மேலான அறிவினையுடையவர் வறியம் என்று மறுகிப் பிறர் பொருளை விழைந்து கொள்ளார். விழையாமை விழுமியோர் நீர்மையாய் விளங்கியுளத. புலம் என்ற து ஐம்புலன்களே. கண், காது, வாப், மூக்கு, மெய் என்னும் இந்த ஐந்து வழிகளிலேயே உயிர்வாழ்வு நடந்து வருகிறது. பொறி நுகர்வுகளில் புலையான அல்லல்கள் கேராமல் நல்ல கிலேகளில் பு ல ன் க கன அடக்கி வருவோரே விழுமிய மேலோாப் விளங்கி யாண்டும் ஒளி மிகுந்து வருகின்ருர். வென்ற என்ற குறிப்பால் புலன்களோடு போராடி வெல்ல வல்லோக விறலும் வெற்றியும் வியகுய்த் தெரிய வந்தது. புலன்களுக்கு அடிமையாப் அவற்றின் போக்கின்படியே அடங்கி உழல்வோரே உலகம் எங்கும் நிறைந்திருக்கின்றனர். புலன்களோடு எதிர்க்க போராட கேர்வார் மிகவும் அரியர்; மூண்டு முனர். போராட நேர்ந்தவரும் அவற்றை வெல்ல முடியாமல் தோல்வியடைந்தே யிருக்கின்றனர். நீண்ட காலம் போராடி வென்றவர் கித்திய முக்கராய் நிலவி கிற்கின்ருர், வாயிலோர் ஐந்திற் புலன் எனும் வேடர் வந்தெனே ஈர்த்துவெங் காமத் தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்னச் சிங்தைகைக் துருகிமெய்ம் மறந்து தாயிலாச் சேய்போல் அலேந்த லேப் பட்டேன் தாயினும் கருணைய மன்றுள் காயக மாகி ஒளிவிடு மணியே! காகனே ஞான வாரிதியே. (தாயுமானவர்)