பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464. திருக்குறட் குமரேச வெண்பா தெய்வ யானை ஏன் பெரிதாக மதித்தாள்? எனின், காலத்தினல் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்க முதல் உதவியை அடுக்க இது இதமா வந்துள்ளது. நன்றி கிலையில் காலமும் ஞாலமும் காண நேர்ந்தன. காலத்தினல் = கக்க சமையத்தில். அஃதாவது அல்லல் உற்று அலமருகின்றபொழுது. ஆல் உருபு கருவிப் பொருண் ஒருவி இடப் பொருளில் வந்தது. இஃது உருபு மயக்கம் ஆம். யாதன் உரு பில் கடறிற் ருயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும். (தொல்காப்பியம்) இந்த இயல் விதி இங்கே சிந்திக்க வுரியது. ஞாலம் = உலகம். நீளமாப் நீண்டு பரந்து கெடிது விரிங் திருப்பது ஞாலம் என வக்கது. இன் உருபு எல்லைப் பொருளது. செய்யாமல் செய்த உதவியின் உயர்வை முன்னம் கூறிஞர். இதில் ஆபக்தவேளையில் உதவும் பெருமையை உணர்த்துகின்ருர். அல்லல் சேர்க்க காலத்தில் கனக்கு ஒருவன் செப்த உதவி சிறிதே எனினும் அது இக்க உலகத்தினும் மிகவும் பெரிகாம். மனித வாழ்வு பல இடையூறுகள் உடையது. இடர் நேர்க்க போது ஒருவன் ஆகாவாப் உதவிபுரியின் அது மூண்ட தயரை நீக்கி நீண்ட இன்பக்கை உயிர்க்கு அருளும். பொருளாலோ செயலாலோ சொல்லாலோ அந்த உபகாரம் சிறிதாயிருந்தாலும் உபயோகக் கால் உயர்க்க ஆதலால் எல்லை கடந்த மகிமை யுடையதாம் உரிமையான அமையம் அருமையாயது. நீர் வேட்கையால் கிலைகுலைந்த ஆவுக்குச் சிறிது கண்ணிர் வார்த்தாலும், பட்டினியால் சாக நேர்க்க ஒருவனுக்குக் கொஞ் சம் அன்னம் கொடுத்தாலும், அந்த நீரும் சோறும் கிலையால் சிறியன ஆயினும் பலனுல் பெரியன; ஆகவே அங்க நன்றிகள் அளவிடலரிய பெருமையாய் ஒங்கி அறங்கள்.அமைந்து கின்றன. தக்க சமையத்தில் செய்த நன்றியை மிக்க மேன்மையாக் கருத வேண்டும் என்பது கருத்து. அரிய பெருமைக்கு உரிய எல்லேயாப் ஞாலம் தெரிய வந்தது. கடல்கள் மலைகள் உயிரினங் கள் முகலிய பல கோடி பொருள்களைத் தன்னுள் அடக்கி