பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 485 கம் கண் விழும் அம் என்று பிரித்தால், புன்கண் புகுந்த போது கம் கண்ணிலிருந்து விழுகிற அந்தக் கண்ணிரைத் துடைத்தவர் என்று பொருள் கொள்ளலாம். அம் = ர்ே. துன்பம் களைந்து இன்பம் அருளினவர்பால் அன்பு புரிந்து வரின் அறமும் புகழும் விளைந்து வரும். அவ்விளைவை விழுமிய பண்புடையாளர் மேவி வருகின்ருர். நன்றியறிவு என்றும் னங் கும் கன்மைகளையே கருகின்றது. அதனைப் பேணி உயர்க. உதவியாளரை எவ்வழியும் உரிமையாக் கருதி வருபவர் செவ்விய மேன்மையாளராய்ச் சிறந்த திவ்விய மகிமைகளை அடைந்து திகழ்கின்ருர், இவ்வுண்மை கம்பர்பால் காணகின்றது. ச ரி தம். கவிஞர் பெருமானை கம்பர் மிகவும் நன்றியறிவுடையவர். மூவேக்கரும் உவக்க போற்றம் முதன்மையை அடைந்தும் இப்பாவேந்தர் சடையப்ப வள்ளலையே எவ்வழியும் நாவேந்திப் புகழ்ந்து வந்தார். இளமையில் தமக்கு அவர் செப்த உதவி கலங்களையெல்லாம் கினைந்து கினைந்து இவர் உள்ளம் உருகியுள் ளார். அவருடைய பேரையும் சீரையும் யாரிடமும் ஆர்வமாய் இவர் கூறி வக்தார். அவ்வாறு பேசி வந்ததோடு அமையாமல் இராம காவியத்திலும் அவரது பெருமையை இடையிடையே ஈயமாப் பாடி யருளினர். சிலபாடல்களைக் கான வருகிருேம் வண்ண மாலே கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் உண்ண எண்ணித் தண்மதியத்துதயத்து எழுந்த கிலாக்கற்றை விண்ணும்மண்ணும் கிசையனேத்தும்விழுங்கிக்கொண்டவிரிநன் னிர்ப் பண்ணே வெண்ணெய்ச் சடையன்தன் புகழ்போல் எங்கும் பரந்துள (வால். (இராமா, மிதிலே, 74) சடைய வள்ளல் புகழ் மண்ணும் விண்னும் பரவியுள்ளத போல் சந்திரன் ஒளி எங்கும் விரிந்து பரந்து கின்றது என கிலவின் கிலையை உவமையால் இங்கனம் விளக்கியுள்ளார். மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு எஞ்சுறக் கடிதெடுத்து எறியவே நளன் விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சம்என் ருேர்களேத் தாங்கும் தன்மைபோல். (இராமா, சேது 9)