906 திருக்குறட் குமரேச வெண்பா மாங்களும் செடிகளும் பயன் தருகின்றன, பறவை ஒலி களும் ஈயம் புரிகின்றன; ஆதலால், சொல்லிலும் செயலிலும் மனிதர் பயனுடையராயிருக்கவேண்டும் என்பதை நயமாக இது விளக்கியுளது. பயன் படிந்து வரும் அளவே பண்பு படிகிறது. பயனுடைய சொல் மனிதனை நயனுடையனுக்கி நலம் பல செப்கின்றது; அறிவுகலங் கனிந்த அந்த இனிய மொழியைப் பேணி வருபவர் அரிய பெரிய பலன்களைக் காணியாகக் காணு கின்றனர். சொல் இனிமையானல் எல்லாம் இனியனவாம். உள்ளுறும் உண்மை கன்னே உரைகள் முங் துரைத்த லாலே ஒள்ளிய மொழியால் உள்ள வுளவெலாம் உணர்ந்து கொள்க; எள்ளுபுன் சொல்லர் என்றும் இழிஞர்என்று இகழ்ந்து திர்க தெள்ளியோர் தம்மைத் தேர்ந்து தெளிந்துகைக் கொண்டுவாழ்க. பூவினில் மணமும் தேனும் பொருங்கிய வாறு போல காவினில் மெய்யும் துாய நயனுயர் இனிய சொல்லும் மேவிய பொழுதே யாரும் விழைந்துமுன் தொழுது போற்றத் தேவியல் உடைய ராகிச் சிறந்து விற் றிருப்பர் அம்மா! (வீரபாண்டியம், குமரன்கோல், 108, 109) சொல்லின் பயன் கனேக் குறித் து வந்துள்ள இவை ஈண்டு எண்ணத்தக்கன. பூவில் கேன் போல் காவில் இன்சொல். பேச்சு வழக்கினல் மனிதன் மாட்சிமை அடைந்துள்ளான். வார்த் தைகள் பயனுடையனவாயின் அவன் உயர் நலம் அடைகிருன். செவ்விய மொழிகளை எவ்வழியும் சுவையாகப் பேசிவரின் அவன் அரிய இனிய பண்பாடுக ளுடைய பெரிய மனிதனுகிருன் செல்வம் அதிகாரம் முதலியவற்ருல் சிறந்திருந்தாலும் பயன் இல்லாத மொழிக ைப் பேசின் அவர் இயல் குறைந்த இழிகின்ருர். இவ்வுண்மை மூவேந்தர்பாலும் தெரிய கின்றது. ச ரி த ம். சேரன் சோழன் பாண்டியன் என்னும் மூவேந்திரும் ஒரு நாள் அரிய ஒரு திருவிழாவை முன்னிட்டு ஒருங்கு சேர்க் திருந்த னர். பெருக்கிருவினரான அவர் உல்லாச உரைகள் பல ஆடிச் சல்லாபம் செப்து வருங்கால் ஏகம்பவாணன் என்னும் பெருங் கொடையாளியைப் பற்றிப் பேச்சு கிகழ்ந்தது. சிறக்க செல்வச் சீமானும் உயர்ந்த வள்ளலும் ஆகிய அவரைக் குறித் த அயலே
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை