23. ஈ ைக 1017 அல்லா தவர்க்கும் இரவிமகன் * அரிய் தானம் அளிக்கின்றன். (1) மைந்தற்கு உறுதி நீ வேண்டில் வல்லே முனிவர் வடிவாகிச் சந்தப் பனுவல் இசைமாலைத் தானுகரனை விரைந்து எய்தி அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய் என்ருல். அவன் ஒன்றும் இந்தப் புவியில் மறுத்தறியான் உயிரே எனினும் ஈந்திடுவான். (2) இரண்டும் அவன் பால் நீகவரின் இருந்தேர் ஊர்ந்திப் படிஅரசர் திரண்டு வரினும் வெஞ்சமரில் திண்தேர் விசயன் எதிர்நில்லார் முரண்டு பொருவிற் கன்னனும்தன் முன்னே எய்தி முடிசிதறிப் புரண்டு மறியும் என வணங்கிப் புத்தேள் அரசன் போகின்றன். (3) கன்னனுடைய அருந்திறலாண்மைகளையும் பெருந்தன்மை வாயும் கொடை வண்மைகளையும் இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். சூழ்ந்து விடுத்த படியே வானவர்கோன் ஒரு ஆான முனிவன் போல் வடிவம் பூண்டு இத் தான வீரனிடம் வர்தான். அணிகளை விதபமாய்க் கேட்டான். உடனே இவன் எடுத்துக் கொடுத்தான். அவ்வாறு கொடுக்கும் போது வந்த வன் வஞ்ச இந்திரன்; மாயன் ஏவலால் வந்துள்ளான்; அேவற்றை ஈங்கால் அழிவு கேளும்” என்று ஆகாயத்திலிருந்து அசரீரியாய் ஒரு ஒலி எழுந்தது. அவ்வுரையைக் கேட்டும் யாதும் உள்ளம் வலங்காமல் இவ் வள்ளல் உதவி யருளினன். இக் குலமகனுடைய கொடை நீர்மையை அறிந்து யாவரும் வியந்தனர். கண்ணனும் சேவர் கோனிடம் இவனே மேன்மையா வியந்து புகழ்ந்தான். உண்மை யாகவெஞ் சமர்முகத்து எறிபடை ஒன்றும்வந் துடலுற ஒட்டாத் திண்மை யாலுயர் கவசகுண்டலங்களைச் சென்றிரந் தவர்க்கு இவன் கொடுத்தான் 128
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/218
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை