23. ஈ ைக 1033 உண்மையான ஆற்றல் உயிர்களின் பசியை நீக்குவதே. பசிக் தீ உயிரை எரித்துத் துயருறுத்தும் ஆதலால் அதனை ஒழிக்கருளுவது உயர்க்க ஆற்றலாய் ஒளி மிகுந்து கின்றது. ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல். (கலி 133) எளியவர்க்கு உதவுதலே ஆற்றலாம் என கல்லந்துவர்ை இங்கனம் குறித்துள்ளார். அல்லலுற்றவர்க்கு ஆதாவு புரிபவன் எல்லாம் வல்ல இறைவன் அருளை எய்துகிருன். ஏழை பங்கா வான் என்பது இறைவனுக்குப் பெயர். அவன் ஆற்றவுரியதை ஆற்றி யருள்பவன் அதிசய மகிமைகளை அடைகின்ருன். உயிர்களின் பசிகளை நீக்கி யருளுங்கள்; அதுவே அறம்; அதுவே தவம்; அதனல் எல்லா இன்ப கலன்களும் உளவாம் என ஈகையின் மகிமையைத் தேவர் இவ்வாறு உணர்த்தியுள் ளார். சீவ தயை திவ்விய கிலேயைச் செவ்வையா அருளுகிறது. பசி எவரையும் வாட்டி வதைக்கும்; அவ்வாறு வதையாக படி உணவூட்டி அதனே நீக்கி யருள்பவன் பெரிய பாக்கியவான் ஆகிருன். தன் பசியை அடக்கித் தவம் செய்வதினும் பிறர் பசி யைத் தீர்ப்பது அருங்கிறல் அமைந்த சிறந்த பெருக்கவமாம். சோரப் பசிக்குமேல் சோற்றுார்திப் பாகன் மற்று ஈரப் படினும் அது வூரான்---ஆரக் கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனல் முடிக்கும் கருமம் பல. (அறநெறிச்சாரம் 121) குடல் பசித்தால் உடல் படிந்துவிடும்; உயிர் சோர்ந்து போம்; அப் பசியை மாற்றினல் யாவும் அதிசய ஆற்றலுடன் ஊக்கி வினையாற்றும் என இது இங்ங்னம் உணர்த்தி யுள்ளது. பசியை எடுத்துக் காட்டி அதனை நீக்கி உயிர்களுக்கு இதம் புரிவதே உயர்ந்த ஈகை எனக் குறித்திருப்பது கூர்ந்து சிந்தித்து ஒர்க்கு உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வுரியது. மானம் ஞானம் மகிப்பு முதலிய உயர் நலன்கள் எல்லாம் பசியால் ஒழிக் அபோம் ஆகலால் அ த இன ஒழித்தருளுவது உயர்ந்த வ ண் ைம தோய்ந்த சிறந்த திண்மையாய் விளங்கி கின்றது. உயிர் துயர் ாே உதவுவது உயர் தவமாய் வருகிறது. 130
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/234
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை