1048 திருக்குறட் குமரேச வெண்பா தெய்வ அமிசம் இல்லாதவன் அன்னம் கொடுக்கமுடியாது. என்று இது குறித்துள்ளது. இதல்ை உணவு கொடுப்பவனது - * - * = - i i H . . . - உயர்வு தெளிவாகின்றது. பசித்துயர் நீங்கி உயிர்கள் உவந்து வாழச் செய்வது உண்டி ஆதலால் அதனை உதவுகின்றவன் உயர் க்க புண்ணியவானுய் ஒளிமிகுந்து திகழ்கிருன். பகுங்து உண்னும் பண்புடையாளரைப் பசிநோய் யாண்டும் எவ்வழியும் தீண்டாது. இது பாண்டவர் பால் கானநின்றது. ச ரி க ம் கருமர் முதலிய ஐவரும் மருவலர் செய்தசதியால் அரசிழ. க்து காடுபுகுந்தனர். வனம்புகுந்தும் யாதொரு குறையுமின்றி இவர் மனம் மகிழ்ந்து வாழ்ந்தார். பாண்டவர் வனவாசம் என் பது நீண்டபுகழோடு நிலவி நின்றது. சவுனகமுனிவரது கவத் தாலும் தெய்வத்திருவருளாலும் கிடைக்க அட்சயம் என்னும் பாத்திரத்தால் நாளும் சுகமாய் நன்கு புசித்து வந்தார். தம் பால் வக்க எவருக்கும் அங்க அமுத சுரபியால் உணவுகளை வழங்கி உதவி புரிந்து உவந்து வாழ்ந்து வந்தனர். எவ்வுயிர்க்கும் இனிய உபகாரிகளாய் இவ்வாறு இவர் வாழ்ந்து வருங்கால் ஒரு. நாள் துருவாச முனிவர் இவரிடம் வந்தார். உரிய காலம் கழித்து பருவால் புரிய வந்தாலும் அவரை இவர் உரிமையோடு உபசரித்து இனிய உணவுகளை ஊட்டியருளினர். உண்டு மகிழ்ந்த அவர் இவரை உவந்து வாழ்த்தினர்; காம் வந்த உண்மையையும் இவர் சிங்கை தெளிய வுாைத்தார். அக்க முனிவர் கூறிய உரைகள் எவரும் கருதி புனா வுரியன. சில அயலே வருகின்றன. நென்னற் புயங்க கேதனன்.தன் இல்லம் தன்னில் தீம்பாலும் கன்னற் கட்டி முதல்பலவும் கனிநெய் யுடனே இனிது அருந்தி இன்னற் பசிதீர் பொழுதத்தில் என்பால் வரங்கொள் என உரைப்ப முன்னர்ப் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடிவேந்தன். (1)
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/249
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை