பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1166 திருக்குறட் குமரேச வெண்பா . செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் போர்த்தொழில் தானே குஞ்சியில் புனேய நிலநாடு எல்லைதன் மலைநாடு என்னக் 5 கைம்மலைக் களிற்றினம் தம்முள் மயங்கத் தேரும் மாவும் செறிகழல் மறவரும் கார் மயங்கு கடலின் கலிகொளக் கடைஇக் கங்கையம் பேர்யாற்று அடைகரைத் தங்கி வங்க நாவியி னதன் வட்க்கு இழிந்து 10 கனக விசயர் முதல் பல வேந்தர் அனைவரை வென்றவர் அம்பொன் முடிமிசைச் சிமயம் ஓங்கிய இமய மால்வரைத் தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் செம்பொன் வாகையும் சேர்த்திய சேரன். (மணிமேகலை,26) சாத்தனரும் இவ்வாறு பாடியுள்ளார். வலியார் முன் தன்னை உணர்ந்த கனகன் மெலியாரை கலியாமல் எவ்வழியும் பின்பு அருளுடையனும் அமைக்கிருந்தது. இதனுல் தெருளுற வந்தது. எளியர்க்கு இரங்கி இதம்செய் அதுவே ஒளியின்ப மாகும் உயிர்க்கு. எவ்வுயிர் க்கும் இாங்கி யருள்.

  • - - = -

இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அருள் அரிய பெரிய செல்வம். அதுவே உயிர்க்கு உறுதிக் தன. அகன யுடையவர் துன்பம் அடையார். யாதும் அஞ்சாமல் எங்கும் சுகமே யு.அவர். அவசை யாண்டும் அல்லல்கள் அணுகா. அருள் நீங்கிகு ல அவலத் துயரமே. - அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. அருளை இழந்தார் அகோகதி யடைந்தார். அருள் இல்லாதவன் செய்யும் அறம் அவமே. அருளைப் பேணி வருவதே அறிவுக்கு அழகு. 23-வது அருளுடைமை முற்றிற் று.