பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 க ல் ல ா ைம 4. 2157 கல்லாதவனது சொல்லேக் கேட்க விரும்புதல் முகில இரண்டும் இல்லாதவளிடம் பெண் போகத்தை நுகர்ந்து களிக்க ஒருவன் விரும்பியது போல் விபரீதமே யாம். இவ்வகையிலும் பொருள் காணலாம். ஆயினும் அது கோணலாம். கல்லாமை என்னும் இந்த அதிகாரத் தில் கல்லாதவனது இழிவைக் காட்டுகிருரேயன்றிக். கேள்வியாளரைப்பற்றி இங்கே யாதும் பேசவில்லை.இட நிலை அறிந்து இன நிலை தெரிந்து உரிமையான பொருளே உண்மையா ஒர்ந்து தேர்ந்து கொள்வதே நேர்மையாம். கல்வியை நன்கு கற்ற புலவன் பேசில்ை அந்தப் பேச்சில் அரிய இனிய அறிவுநலன்கள் சுரங் துவரும் : பேசுகின்ற அவனுக்கும் கேட்கின்ற அவையோருக்கும் உவகையாம். சுவைகளே நுகர்ந்து மகிழ்பவர் சுகிகளாய் உயர்ந்து மதி யூகிக ளாய்ச் சிறந்து திகழ்கின்ருர். உருவநலம் கனிந்த பருவமங்கை கலவியைக் காமு றின் அவளேக் கலந்தவனுக்கும் அவளுக்கும் ஒருங்கே இன்பமாய் உயர்ந்த பலன்கள் விளைந்து வரும். அறிவின் நுகர்வுக்குப் பொறி நுகர்வு உறவாய்: கின்றது. உயிரின் சுவையும் உடலின் சுவையும் உணச வந்தன. இருவகையும் தகவாய் வரின் உவகையாம். இலக்கணமும்தருக்கமும் இரண்டுகண்கள்; ஆகவே இரண்டு முலைகள் என அக்கலைகள் ஈண்டு எண்ண வந்தன. குறிப்புகள் கூர்ந்து சிங்திக்கத் தக்கன. மங்கையர் மார்பில் முகிழ்த்திருக்கும் கிலே முலை எனநேர்ந்தது. கலே பறிவின் பயனேத் தெளிவா விளக்கு தற்கு அது துனேயாய் கின்றது. ஆண்பால் பெண்பால் என்னும் இருபாலும் ஞான ஒளியால் உய்ய வுரியன. அந்த வுரிமை ஈண்டு நன்கு உய்த்துனரவுற்றது. m முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுட்பெருயிைன்-செப்பும் கலேயள வே யாகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமா மூப்பு. (நல்வழி 39). s