41. கல்லாமை 21 69 அதிமதுரம் என்றே அகிலம் அறியத் துதிமதுர மாகத் துதிக்கும் - புதுமைஏன் ? காட்டுச் சரக்குலகில் காரமில் லாச்சரக்கு கூட்டுச் சரக்கதனைக் கூறு. அதிமதுரம் என்னும் பேரால் ஒர் வேர் உள்ளமை யால் காட்டுச்சரக்கு என இவ்வாறு கூட்டி மொழிந்தார். இப்படி வார்த்தைகள் வளர்ந்தன ; பின்பு வாத சபை கூட்டி இருவரும் வாதம் புரிய மூண்டார். இவருடைய கூட்டாளிகள் எல்லாரும் ஒருங்கு திரண்டு நின்று மனம் போனபடி காளமேகத்திடம் பல கேள்விகள் கேட்டார். எல்லாவற்றிற்கும் அவ்வல்லாளர் எதிர்விடை தந்து அனைவரையும் கல்லாதவராக்கினர். தமது கல்வி அறி வால் அந்தக் கவி வீரர் வெற்றி பெற்றிருந்தும் இந்தக் க வி ரா ய ர் போதனையால் திருமலைராயனும் அவரை மதியாது கின்ருன். அதனால் அவர் வெகுண்டு வசை பாடினர், வசைபாடக் காளமேகம் என இசைபெற்று கின்ற அவர் பாட்டால் அந்த ஊர் பாழாயது. கோளர் இருக்கும்.ஊர் கோள்கரவு கற்றவூர் காளேகளாய் நின்று கதறும் ஊர்-தாளேயே விண்மாரி அற்று வெளுத்து மிகக்கறுத்து மண்மாரி பெய்கஇந்த வான். * (1) செய்யாத செய்த திருமலேரா யன்வரையில் அய்யா அரனே அரைநொடியில்-வெய்யதழல் கண்மாரி யால்மதனேக் கட்டழித்தாய் தீயோரை மண் மாரி யாலழிய வாட்டு. (காளமேகம்) (2) என மனம் கொதித்து இவ்வாறு அவர் பாடிப்போக வே அவ்வூர் பாடழிந்து பாழாய்ப் போயது. தம்மை வி 1ங்து தருக்கி நின்றவர் நன்மை இலராய் நலிந்து கோலேந்தார். கல்லாதவராயினும் யாதும் சொல்லாமல் அங்கே வாய் அடங்கியிருந்தவர் நலம் பல பெற்ருர். கற் ாவர் முன் சொல்லாடாமல் அடங்கியிருப்பின் அது மிக : நல்லதாம் என்பதை உலகம் அன்று உணர்ந்து மன்றது. நாவின் அமைதி எங்கும் நன்மை தருகிறது. 272
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை