பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 202量 கல்வித் தேர்ச்சியும் தைரிய சீலங்களும் என்.றும் இயல்பாக வுடைய இவனது புகழ் எங்கும் ஒளி வீசி நின்றது. தாங்காமை கல்வி துணிவுடைமைகள் கிலன் ஆள்பவரிடம் நீங்காகிருக்கும் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து மகிழ்க்க.த. கலேபலவும் கற்றவர்க்கு ஒர் கண்ணுய கல்வியினுன் இலேஎன வாய் உரைத்தல்பெயர் எனக்கொடுக்கும் கரதலத்தான் அலைகடல்சூழ் நெடும்புடவி அனைத்தும் ஒரு குடை நிழற்றிப் புலைமிடிவேர் அறக்களை ந்து போக்கியெழும் விறல்வீரன். (1) உரைப்பார்வாய் உரைப்பவைதன் புகழேயாம் படியுயர்ந்தான் தரைப்பால்வாழ் உயிர்க்கன் றித் தரியலரே யாளுர்க்கும் விரைப்பால்வண் கற்பகத்தார்மிலேச்சுவான் கொடுத்துவப்பான் திரைப்பால்மால் விழிவளரத் திசையுருட்டும் நேமியினன். (2) ஒருபுடைவெவ் அராக்கொளினும் ஒருபுடையால் உலகனைத்தும் கருகிருள் தீர் தரவிளக்கும் கடவுள் மதிக் குலத்துதித்தான் இருநிலத்தில் உயிர் வருத்தம் தன்வருத்தம் எனக்கொண்டே பொருதளித் திட் டவையுவப்ப உவப்பெய்தும் புந்தியினன். )ே ஆன்ற பல பெருங்கேள்வி அமைச்சர் புரோ கிதராதி ஏன்ற அர சுரிமையுடைச் சுற்றத்தார் எலாம் சூழத் தோன்றமதிக் குடைநிழற்றித் துன்னலர்வெம் பகைமுருக்கித் தேன் ததும்பு வாகை கொளிஇச் செய்யகோல் நடாத்திடுவான். (திருப்பெருந்துறை) கல்வி கொடை வீரம் கிே கருதியதை முடிக்கும் கி/மம் முதலியன இம்மன்னனிடம் மன்னியிருக்க மாட்சிகளை இன்ன வாறு மேலோரும் நாலோரும் போற்றி யுள்ளனர். ஆளும் வேந்தன் அறநெறி யாளனுய் நாளும் மாந்தரை நாடி நலமுடன் கேளும் கேண்மை கிளர்ந்து புரந்திடின் நீளும் ஆட்சி நெடிது நிலவுமே. வீரம் கொடைரீதி மெய்யமைதி வென்றியருள் ஈரம் அரசின் இயல்பு. தீா கைரியங்கள் அரசனுக்குச் சீரிய ர்ேமைகளாம். mimimi