பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 2333 ளார். இங்கே ஆவது அறியும் உயிர் என்றது தனது உண்மையான ஆன்ம நிலையை. எதை அறிந்தால் எல் லாம் அறிந்ததாமோ அந்த மெய்யறிவு ஈண்டு அறிய வந்தது. பொய்யா மொழியோடு இது பொருங்தி வந்துள்ளது. அவ்வுண்மையை உய்த்து உணர்க. வருவதை முன்னறிபவர் மாட்சிமிகப் பெறுவர்: அங்ங்னம் அறியாதார் தாழ்ச்சி யுறுவர். திருமால் இட மும், இராவணன் பாலும் இவை தெரிய நின்றன. ச ரி த ம் இலங்கை வேந்தன் தள்ளருங்திறலுடன் தருக்கி வெள்ளியங்கிரியை அடைந்து வீருேடு போராட நேர்ங் தான். பின்பு எண்ணித் தெளிந்தான். கண்ணுதற் கடவுளேத் துதித்து வேத கீதம் பாடின்ை. அவனது சாமகானத்தைக் கேட்டு மகிழ்ந்த பரமன் உனக்கு வேண்டிய வரங்களேக் கேள்! என்று விளம்பினுன். 'மூவுலக ஆட்சியும் மூவாவலிமையும் மூன்றரைக் கோடி ஆயுளும் வேண்டும்' என்று வேண்டின்ை. அவ்வாறே ஆகுக என்று ஆண்டவன் அருளி விடுத்தான். அவன் பெற்று வருகிற வரங்களேத் திருமால் அறிந்தார். பின்பு இராமாவதாரத்தில் அவனே வெல்லவல்ல கிலேயை முன்னுற ஒர்ந்து ஒரு முனிவன் போல் இடைவழியில் எதியே தோன்றிர்ை. இந்த மாதவனேக் கண்டதும் அவன் மதித்து நின் முன். உற்றதை முற்றும் உசாவி அறிந்தார். வி, பாப் விர கோடு பேச நேர்ந்தார்; 1. அந்தோ! இலங்கேசா! ஈசனிடம் போய் நீ யோசனே யில்லாமல் வரம் பெற்றிருக்கிருய்: மூன்றரைக்கோடி என்பது முழுத்தொகையாயில்லே. பாதி எப்போதும் உபாதியே. அவை ஒழிய இன்னும் அரைக்கோடி தருக என்று இறைவனிடம் போய் வேண்டுக; அவர் தந்தருளு வார்' என்று விந்தையோடு கூறினர். இவருடைய உரைகளிலுள்ள தொனிக் குறிப்பை அவன் துணித் துணராமல் மீண்டும் போய் அரனிடம் அரைக்கோடி அருளுக என்று வேண்டின்ை. முன்னவன் புன்னகை