பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 2335で 428. சூதாட அஞ்சாமல் சொன்னுன் தருமரஞ்சிக் கோதென்ருர் என்னே குமரேசா-யாதேனும் அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில். (அ) இ-ள். குமரேசா சகுனி சூது ஆடுதற்கு அஞ்சாமல் சொன்னன்; தருமர் ஏன் அதனே அஞ்சிர்ை ? எனின். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்க. அறிவுடைமையுள் அச்சமுடைமை அறிய வந்தது. அஞ்சவுரிய தீமையை அஞ்சாது புரிவது அறிவின் மையாம்; அஞ்சத்தகுவதை அஞ்சிவிலகுவது அறிவுடை யார் செயலாம். பேதை ஆகாமல் மேதை ஆகுக. ஆவதை அறிவதே அறிவுடைமையாம் என்று முன் னம் குறித்தார்: இதில், அஞ்சுவதை அஞ்சுவதே அறி வாம் என்கின்ருர். நல்ல அறிவு நலமே தெரிகிறது. அஞ்சுவது என்றது. பழி பாவங்களே. அஞ்சுவன என்று பன்மையால் கூருமல் ஒருமையில் உரைத்தது அதன் இனத்தை உய்த்து உணர. வரம்பின்றி உள்ள மையால் ஒருமை நிலையில் மருமமா யுரைத் தருளிர்ை. சிறிய ஒரு தீமையும் நஞ்சாக அஞ்சுக என்பது கயமச யறிய வந்தது. அஞ்ச வில்லேயேல் அல்லலே யாம். அச்சமும் நாணமும் உச்சமான அறிவின் உயர் நீர்மைகள். அறிவில்லாத ம ைட ய ரி ட ம் இவை மருவி யிரா. பழி அஞ்சார் பாழா யழிவார். அச்சமும் நானமும் அறிவிலோர்க் கில்லே. அதிவீரராம பாண்டியன் இவ்வாறு குறித்துள்ளார். தன் உயிர்க்குத் துயர் நேருமே என்பதை உணரா மல் மடமை மீதுார்ந்து தீமையில் துணிதலால் அஞ்சுவது: