பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோ ன் ைம 29.47 காட்டுக்கு உயிராதாரமாயுள்ளது அரச நீதியே: அதனையே ஆவலோடு யாவரும் எதிர்பார்த்துள்ளனர். Justice consists in doing no injury to men; decency in giving them no offense. Cicero) மாந்தருக்குத் தீங்கு மருவாமல் நன்மைசெயும் வேந்தரியல் நீதி விதி. இவை ஈங்கு ஆய்ந்து அறிய வுரியன. இரக்கம் அற்ற அரசனே அரக்கன் என அஞ்சுவர். இது வேனன் பால் விளங்கி நின்றது. ச ரி த ம். இவன் சூரிய குல வேங்தன். துருவன் மரபில் வந்த வன். தங்தை பெயர் அங்கன்; தாய் சுநீதை. நெடுங் காலமாகப் பிள்ளைப் பேறின்றி உள்ளம் வருங்தி அருங் தவம் புரிந்து பெற்றனர். ஆதலால் பெற்ருேர் இவனேப் பெருங்காதலோடு போற்றி வந்தனர். இளமையிலேயே பல கலைகளேயும் இவன் பயின்று வந்தான். பருவம் எய்தி இளவரசனுயிருந்தும் உளநிலை திரிந்து பழி வழி களில் திரிந்தான். இவனது நிலைமையை அறிந்து நெஞ் சம் கவன்று வந்த தந்தை அரச பதவியைத் துறந்து விட்டுத் துறவியாப்ப் போனன் போகவே ஏகபோகமா ஆட்சியை இவன் கைக்கொண்டான். இரக்கமின்றி எவ் வழியும் செருக்கி வெய்ய வினைகளே புரிந்து வந்தான். வரவே வையம் இவனே வைது வெறுத்தது. காதல் மைந்தன் வளர்ந்து கலேபல ஒத ஓத உணர்வு குறைந்தனன்; வேத நீதி ஒழுக்கம் விடுத்தன ன் ஆதி யாய அறம்பிழைத் தான ரோ. (1) அன்னை கூற்றின் மடமகள் ஆதலால் இன்ன தன்மையன் ஆயினன்; ஏழ்புவி துன்னு கீர்த்தித் துருவன் எனப்படும் மன்னர் மன்னன் மரபினில் தோன்றின்ை. (2)