59. ஒ ற் ற ட ல் 3089 மாது கேட்டியிம் மடவரல் விதர்ப்பர்கோன் புதல்வி காதல் நாயகன் நிடதர் கோன் காசினி முழுதும் சூதினுல் இழந்து இவளேயும் கானிடைத் துறந்தான்; ஆதலால் இவள் தேடுஎன விதர்ப்பகோன் அறைந்தான். தேண்டி எங்கனும் கண் டிலன் திருவை நின் மனேயில் காண்டல் செய்தன ன் கன்னலிற் பழுத்தமென் மொழியாள் மாண்ட பேரெழில் வாணுதல் வயங்கிய மறுவால் ஈண்டுனர்ந்தன ன் யான் என மறையவன் இசைத்தான். (3) உரை செய் மாற்றம் ஒர்ந்து உள்ளுயிர் உருகுறத் தழுவிக் கரைசெய் வேலையில் கருந்தடங் கண்கள் நீர் உகுப்ப எரிமரிைப் பொலன் சிவிகையில் இருள்கனிந்து ஒழுகும் விரை செய்கோதையைவிதர்ப்பர் கோனகர் வயின் விடுத்தாள். கொள் ஆள வண்டினம் கூட்டுனும் நறுமலர்க் கோதை அள்ள லங்கருஞ் சேற்றிடை அரக்கிதழ் விரிந்த வள்ள வாய்ச்செழுங் கமலமேல் மட வனம் துயில்கூர் வெள்ள நீர்வயல் விதர்ப்பர் கோன் நகரமே யின ளால். (5) அழுத உண்கணும் அற்றமெல் ஆடையும் அலங்கல் கழுமச் சூட்டுபு கைசெயாக் கருங்குழற் காடும் விழியி னுேக்கலும்விதர்ப்பர் கோன் வெய்துயிர்த்தயர்ந்தான் தழுவி அன்னையர் உறுதுயர் சாற்றலாம் தகைத்தே? (6) காட்டில் நள்ளிருட் காலையில் காவலன் நீத்த தீட்டொன எழில் தெரிவையைத் தேடின ன் கொணர்ந்த மூட்டு முத்தழல் முறைமையின் வளர்த்திடு சுவேதன் வேட்ட யாவையும் கொள் கென அளித்தன ன் வீமன். (7) (நைடதம்) நடந்துள்ள கிலேமைகளே இவை வரைந்து காட்டி யுள்ளன. காட்சிகளே க் கருதிக் காண்பவர் இந்த ஒற்ற னுடைய மாட்சிகளே யுணர்ந்து மகிழ்ந்து வியந்து கொள்வர். அனைவரையும் ஆராய்ந்து அரசுக்கு உதவி புரிபவனே உண்மையான ஒற்றன் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து நேரே தெளிந்து நின்றது. உற்ற அரசுக் குதவியாய் எவ்வழியும் ஒற்றிவரல் ஒற்றுக் குரு. அரசுக்கு உதவுக. 387 o
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/292
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை