60. ஊ க் க பம் உ ைட ைம 3 25 கைத்து= கைப்பொருளாக. புறப் பொருள்கள் பேழை முதலிய வேறு இடங் களில் இருக்கும்; ஊக்கம் உள்ளத்துள்ளேயே என்றும் இதமாய் உறைந்திருக்கும் ஆதலால் இதன் உரிமையும் உறவும் உறுதியும் இங்ஙனம் உணர வந்தன. அல்லாவார் = உள்ளம் கலங்கார். உயிர் வாழ்க்கைக்கு உறுதி யாயிருங்த செல்வம் இழந்து போனல் எவரும் அல்லல் உழங்து படுவர்: இது மனிதரிடம் மருவி யுள்ள இயல்பு. இந்த இயற்கையை வென்று ஊக்கம் உடையான் யாண்டும் தளராமல் அதிசய கிலேயில் உயர்ச்சி யடைந்திருக்கிருன். அல்லல் உருர் என் மைல் அல்லாவார் என்றது. கிலே குலேந்து நெஞ்சம் கலங்கார் என்னும் கிலேமை தெரிய. அல்லாத்தல், அலமருதல்களின் எதிர்மறை யாய் இது ஈங்கு மருவி வந்துள்ளது. அல்லாந்தான் போலப் பெயர்ந்தான். (கலி 1 11) அல்லாந்து அவள் நடுங்க. (சிந்தாமணி 2963): அல்லாத்தல் கிலேயை இவற்ருல் அறிகின்ருேம். உடையார் அல்லாவார் என்ற தல்ை இந்த உடைமை யின் தன்மையும் வன்மையும் நேரே தெரிய கின்றன. அழியா உடைமையாகிய ஊக்கத்தை உடையவர் அழி யும் பொருள்களின் அழிவுக்கு அலமரலடையார் என்க. ஆக்கம் இழந்தாலும் ஊக்கம் உடையவர் உள்ளம் கலங்கார்; ஊக்கி முயன்று எங்கும் உயர்ந்து கொள்வச். இவ் வுண்மை ஆரியன் பால் அறிய வங்தது. ச ரி த ம். * இவன் வீரபாண்டியன் என்னும் வேங்தன் மைக் தன். தாய் பெயர் இந்து காங்தை. அழகும் அறிவும் ஆண்மையும் ஆற்றலும் இவனிடம் ஏற்றமாயிசைக் திருந்தன. இவனுடைய தமையன் இராசசூரன் என்னும்
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/328
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை