பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 16.4 திருக்குறட் குமரேச வெண்பா எந்நாட்டும் எத்தலத்தும் மற்றவரும் அவரவருக்கு இயன்றதே செய்து அந்நாட்டில் வாழ்வாரும் அவரவரைப் போல்வார் போன்று அடுத்து வைகி முன்ட்ைடும் சந்தனமா முதுமரங்கள் பலகானில் முளேத்து வாய்த்துப் பின்ட்ைடம் மனம் பிறவும் பெறச்செயல் போல் சிற்சிலரைப் பேதம் செய்தார். (? ) ஆயக லேயிலுலகில் அங்கங்கே தவம் பொறை நல் அருள் ஆசாரம் நேய மா விரதம் அன்பு தானதன்மம் வாய் மைநெறி நியமம் யாவும் துாயகான் மலே நதியின் துறைநெடும்புண் னியத்தலமித் தொடர்ச்சி தோறும் ஏயசீர் இருட்டறையின் ஏற்றிய தீபங்களே ப் போல் இலங்கு மம்மா. (2) (மெய்ஞ்ஞான விளக்கம்) உரன் உடைய உறுதியாளர் உலக மக்களுக்கு ஊக்கமாய் நலம் புரிந்துள்ளதை இவை விளக்கியுள்ளன. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. ஊக்கம் உடையவரே யாவும் உடையவர். அந்த உடைமையே உண்மையான உடைமை. அதல்ை எல்லாம் பெறலாம். அதனே நாடி ஆக்கம் ஓடிவரும். அதன் வழியே உயர்வுகள் உளவாகின்றன. கருதியதே காண வருகிறது. உறுதி யாளன் உள்ளம் தளரான். வள்ளல் என வான் புகழ் பெறுவான். வீரன் என வெற்றி யுறுவான். 10 உரம் உடையரே மக்கள்; இல்லார் மரங்களே. சுல்-வது ஊக்கம் உடைமை முற்றிற்று.