பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ168 திருக்குறட் குமரேச வெண்பா வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்காக-செய்ய சுட ராழி யான டிக்கே சூட்டினேன் சொல்மாலே இட ராழி நீங்குகவே என்று. (இயற்பா: 1} அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன் புருகு சிந்தை இடுதிரியா- நன் புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன். நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான். (இயற்பா: 2) உடம்பெனும் மனேய கத்துள் உள்ள மே தகளி ஆக மடம்படும் உணர்நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளே தாதை கழலடி காண லாமே. (தேவாரம்) பொய்கை ஆழ்வாரும், பூதத்து ஆழ்வாரும், திருநாவுக் கரசரும் இவ்வாறு சுடர் விளக்கு ஏற்றி இறைவனே க் கண்டு மகிழ்ந்துள்ளனர். உருவகங்களின் பொருள் தயங்களே ஒர்ந்து உணர்பவர் உண்மை நிலைகளே த் தேர்ந்து தெளிந்து கொள்வர். மெய்யுணர் வுடைய மேதைகளின் விழுமிய மொழிகள் தெய்வ ஒளிகளாய்ச் சிறந்து தேசு வீசித் திகழ்கின்றன. மடியால் மனிதன் கெடுவான் என் மைல், குடி கெடும் என்றது ஏன்? எனின், அதன் கொடிய நெடிய அழிவுகள் தெளிவாய்த் தெரிய என்க. மடி நுழையவே. கேடு தானகவே விளேயும்; குடி அழிய நேரும் என்பது: வினேயால் விளங்கியுளது, மடி = சோம்பல். மனிதன் உள்ளத்தை மடித்துக் கெடுப்பது என் லும் காரணக் குறி யுடையது. ஊர=ஊர்ந்து சேர. மடி மந்திகதி யுடையது ஆத. லால் அதன் விளைவு இங்தவாறு அறியவந்தது. பொல் லாத புலைத் தீமைகளே யுடைய அது மெல்லப் புகவே, எல்லா நலன்களும் ஒல்லையில் ஒழிய நேர்கின்றன. அடிையை மாசு என்றது அதன் கொடிய நீசம் தெரிய. மாசு = அழுக்கு; கசடு; குற்றம்.